மேலும்

சீன நீர்மூழ்கி மீண்டும் வருகை – இந்தியா கடும் கோபம்

இந்தியாவின் கவலைகளைப் பொருட்படுத்தாமல், சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது, இந்தியாவைக் கோபத்துக்குள்ளாகியுள்ளதாக, இந்திய நாளிதழான எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வத்திக்கான் குழு கொழும்பு வந்தது – பாப்பரசரின் பயணம் குறித்து முடிவு செய்யும்

சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலால், பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்காப் பயணம் குறித்த சந்தேகங்கள் நீடிக்கும் நிலையில், பாப்பரசரின் பயணம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக வத்திக்கானில் இருந்து மூன்று பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்துள்ளனர்.

இரண்டாவது தடவையாகவும் கொழும்பில் சீன நீர்மூழ்கி : ‘வழக்கத்துக்கு மாறானது’ – கேணல் ஹரிகரன்

சீன நீர்மூழ்கிகளின் தொடர்ச்சியான கொழும்பு வருகை புதுடெல்லிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் இன்றும் தொடர்கிறது காணாமற்போனோர் குறித்த சாட்சியப் பதிவு

காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ளது.

கட்டாரில் இருந்து திரும்பிய முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது

கட்டாரில் இருந்து கொழும்பு திரும்பிய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் உயிரினங்களைப் பாதுகாக்க பிரபாகரன் உதவினார்! – தமிழ்நாட்டின் தலைமை வன அதிகாரி

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார்

கொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் சீன நீர்மூழ்கி – கருத்து வெளியிட மறுத்த இந்திய அதிகாரி

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனக் கடற்படையின் மற்றொரு நீர்மூழ்கியை கொழும்புத் துறைமுகத்துக்குள் சிறிலங்கா அனுமதித்திருப்பது இராஜதந்திர வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இருநாட்டு சிறப்புப் படைப்பிரிவுகளும் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி ஒன்று நாளை (நவம்பர் 3ம் நாள்) ஆரம்பிக்கப்படவுள்ளது.

‘அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும்’ – ஊடகம்

சிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும். சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா இவற்றைத் தனது கவனத்தில் எடுக்காது சிறிலங்காவுடன் அரசியல் உறவைப் பேணுவதென்பது ஒரு பிழையான நகர்வாகும்.

சிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்

சிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரை இடம்பெற்றது.