மேலும்

பிரிவு: செய்திகள்

நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படையின் அனுபவங்கள் – நூலை வெளியிட்டார் முன்னாள் தளபதி

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட எழுதிய அதிஸ்டானய (விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததில், கடற்படையின் பங்கு) என்ற நூல் இன்று காலை கொழும்பில்  வெளியிடப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் சிறிலங்காவின் முயற்சி படுதோல்வி

கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளைக் கவரலாம் என்று திட்டமிட்டிருந்த சிறிலங்காவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் முன்னாள் போராளியின் இறுதிச்சடங்கு

மன்னார் வெள்ளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் இறுதிச் சடங்கு நேற்று சிறிலங்காப் படையினரின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபைக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தும் இந்தியாவின் வாகனங்கள்

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாவனைக்கு எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தில் நீடிக்குமா ஜாதிக ஹெல உறுமய? – முடிவு இன்று அறிவிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் தொடர்வதா – வெளியேறுவதா என்பதை முடிவு செய்வதற்காக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு இன்று கூடவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தலில், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்கும் உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரான அமெரிக்க இராணுவ விஞ்ஞானிக்கு அனைத்துலக பொறியியல் விருது

அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொய் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ச – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொய் கூறியுள்ளதாக சிறிலங்கா சமாதான முயற்சிகளில் நோர்வேயின் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய  எரிக் சொல்ஹெய்ம் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரை – அமைச்சர் வாசுதேவவிடம் பொறுப்பு

வரும் ஜனவரி மாதம் அதிபர் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரைப் பணிகளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஒப்படைத்துள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.