மேலும்

பிரிவு: செய்திகள்

தூக்கில் இருந்து மீண்ட மீனவர்கள் நள்ளிரவில் சென்னை திரும்பினர்

சிறிலங்கா அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவுக்கு தாவினார்

சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இன்றுமாலை இணைந்து கொண்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் புதுடெல்லி சென்றனர்- மோடியைச் சந்திக்க ஏற்பாடு

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பை அடுத்து நேற்று விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவரையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு பிரகடனத்தில் ஒப்பமிட்டார் மகிந்த

சிறிலங்காவில் அடுத்த அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார். (3ம் இணைப்பு)

சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு – 1.30 மணிக்கு வெளியாகும்

அடுத்த சிறிலங்கா அதிபர் தேர்தல் பற்றிய அறிவிப்பு  இன்று பிற்பகல் 1.30 மணிக்கு  வெளியாகும் என்று, சிறிலங்கா அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (2ம் இணைப்பு)

சீன கடற்படைத்தள விவகாரம் – நாடாளுமன்றத்திலும் எதிரொலிப்பு

சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக நமீபிய நாளிதழில் வெளியான செய்தி, சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.

புலிகள் எரித்த சடலங்களை ஒட்டுசுட்டான் காட்டில் தேடுகிறது சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை ஆய்வாளர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தைக் கண்டுபிடிக்க தேடுதல் ஒன்றை சிறிலங்கா காவல்துறை ஆரம்பித்துள்ளது.

இன்று நண்பகலுக்குப் பின்னர் தேர்தல் அறிவிப்பு – உறுதிப்படுத்தினார் பசில்

அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாண மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் – உறவினர்கள் கோரிக்கை

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று யாழ்ப்பாண மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு நள்ளிரவு வெளியாகவில்லை – சிறிலங்கா அரசுக்குள் இழுபறி

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.