மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்காவில் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் – முறைப்படி அறிவிப்பு.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலையில் அறிவித்துள்ளார்.

மைத்திரிபால உள்ளிட்ட 3 அமைச்சர்களை பதவிநீக்கினார் மகிந்த

எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

போர் தொடங்கி விட்டது – ராஜித சேனாரத்ன

நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போர் தொடங்கி விட்டது என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகிந்தவை எதிர்க்கும் பொதுவேட்பாளர் நானே! – அறிவித்தார் மைத்திரிபால

எதிரணியின் சார்பில் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொது வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ( 3ம் இணைப்பு)

அலரி மாளிகையில் அவசர கூட்டம் – மகிந்த ராஜபக்ச அழைப்பு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் சிசன் ஐ.நாவுக்கான பிரதி தூதுவராகிறார் – செனட் அங்கீகாரம்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

ஊடகங்களைச் சந்திக்கிறார் மைத்திரிபால – கொழும்பு நகர மண்டபத்தில் குவிந்துள்ள செய்தியாளர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும், மைத்திரிபால சிறிசேன கொழும்பில் சற்றுநேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

மகிந்தவைச் சந்தித்தார் மைத்திரிபால சிறிசேன – கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார்.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன?

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில்,  சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சொல்ஹெய்மின் மிரட்டலுக்கு அஞ்சவில்லையாம் சிறிலங்கா

நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஒரு பொய்யர் என்றும், தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.