மேலும்

பிரிவு: செய்திகள்

மைத்திரிபாலவின் கருத்தினால் சம்பிக்க அதிருப்தி

தாம் ஆட்சிக்கு வந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது குறித்து, ஜாதிக ஹெல உறுமய அதிருப்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவை எதிர்க்கமாட்டேன் – பின்வாங்கினார் சரத் என் சில்வா

மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் இடமாற்றம் வழக்கமானதாம்

யாழ்ப்பாணத்தில் இருந்து மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமானதொரு நடவடிக்கை தான் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

அஸ்வர் விட்டுக்கொடுத்த பதவியை ஏற்க மறுக்கிறார் அமீர் அலி

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்குறுதியை காப்பாற்றவில்லை கோத்தா – கத்தோலிக்கத் திருச்சபை அதிருப்தி

பாப்பரசரின் படத்தை தேர்தல் பரப்புரைக்கு சிறிலங்காவின் ஆளும்கட்சி பயன்படுத்தி வருவது குறித்து கத்தோலிக்கத் திருச்சபை கடும் அதிருப்தியடைந்துள்ளது.

பண்டா குடும்பம் மீது பழிபோடுகிறார் மகிந்த

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கோத்தபாய ராஜபக்சவை தான் அறிமுகப்படுத்தியதாகவும், தனது சகோதரர்களான பசிலையும், சமலையும் மக்களே அரசியலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவைப் புறக்கணித்தது இந்தியா – வெளிவிவகார அமைச்சு கவலை

இந்திய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தள நுழைவிசைவு திட்டத்தில் சிறிலங்கா உள்ளடக்கப்படாதது குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

திங்களன்று கொழும்பு செல்கிறார் அஜித் டோவல் – மைத்திரியையும் சந்திக்கிறார்

சிறிலங்கா கடற்படை ஒழுங்கு செய்துள்ள கடல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாளை மறுநாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கூட்டமைப்பை புதுடெல்லி அழைக்கவில்லை – சுமந்திரன்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

ஒப்புக்கொண்டது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியா நோக்கி 37 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதை அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் ஒப்புக்கொண்டுள்ளார்.