மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்தவுடன் சஜித், சம்பிக்க, கம்மன்பில சந்திப்பு – கோத்தாவும் உடனிருந்தார்

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்துள்ள எதிரணித் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, சஜித் பிறேமதாச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

சென்னையில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான சாகிர் ஹுசேனுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை அடுத்தவாரம் கவிழ்கிறது? – வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும்

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின், மாகாணசபை உறுப்பினர்கள், போர்க்கொடி உயர்த்தியுள்ளதையடுத்தே இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

சரியான பாதையிலேயே செல்கிறதாம் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை சரியான பாதையிலேயே செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மகிந்த குடும்பத்தை போர்க்குற்ற விசாரணையில் இருந்து பாதுகாப்பேன்– மைத்திரிபால உறுதிமொழி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையோ, அவரது குடும்பத்தினரையோ அல்லது போரை வென்றெடுத்த படையினரையோ, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல தான் அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அஸ்வர் பதவி விலகினார் – அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர், இன்று தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.இவர் தனது பதவிவிலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

பாகிஸ்தானில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி முக்கிய ஆய்வு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருக்கு இன்று பாகிஸ்தான் விமானப்படைத் தலைமையகத்தில் மரபுரீதியான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மருந்து நிறுவனங்களிடம் 100 கோடி ரூபா சுருட்டிய ‘நபர்’ – அம்பலப்படுத்துகிறார் மைத்திரிபால

தேசிய மருந்துக் கொள்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் தடுப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள ஒருவர், 100 கோடி ரூபாவை மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பெற்றுள்ளதாக, முன்னாள் சுகாதார அமைச்சரும், எதிரணியின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் 18 கடற்படைத் தளங்களை அமைக்கும் திட்டம் – சீனா நழுவலான பதில்

சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக வெளியான அறிக்கை குறித்து விசாரணை நடத்தியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

37 அகதிகளுடன் படகை சிறிலங்கா கடற்படையிடம் இரகசியமாக ஒப்படைத்தது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற போது, இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்ரேலியக் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்ட 37 இலங்கையர்கள் நேற்று சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.