தமிழ்நாட்டில் இருந்து படகை கடத்தி செல்ல முயன்ற பருத்தித்துறை இளைஞர் கைது
தமிழ்நாடு மீனவரின் படகை கடத்திக் கொண்டு, சிறிலங்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற வடமராட்சி இளைஞர் ஒருவர், தமிழ்நாடு மீனவர்களால் நடுக்கடலில் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
வினோத்குமார் என்ற பருத்தித்துறையைச் சேர்ந்த, 26வயதுடைய, இந்த இளைஞர் கடந்த ஏப்ரல் 26ம் நாள் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்.
வேளாங்கண்ணி பகுதியில் தங்கியிருந்த அவர், உள்ளூரில் உள்ள சிவானந்தம் என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு. அவரது படகில், மீன்பிடிக்கச் சென்று வந்தார்.
இந்தநிலையில், அவர், நேற்று சிவானந்தத்தின் படகை எடுத்துக் கொண்டு பருத்தித்துறைக்குத் தப்பிச் செல்ல முயன்றார்.
நடுவழியில், அவரது படகின் டீசல் தீர்ந்து போன நிலையில், தமிழ்நாடு மீனவர்களின் உதவியைக் கோரினார்.
அவர்கள் டீசல் கொடுத்து உதவியபோதே, அது உள்ளூர் படகு என்பதையும், அது சிறிலங்கா நோக்கி செல்வதையும் கண்டறிந்தனர்.
உடனடியாக அவரை மடக்கிப் பிடித்ததுடன், தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதன் அடிப்படையில், வினோத்குமார் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.