மேலும்

பிரிவு: செய்திகள்

சீனாவின் திட்டத்துக்கு சிறிலங்காவில் வலுக்கிறது எதிர்ப்பு

சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு சிறிலங்காவில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது.

மகிந்தவின் பரப்புரைக் கூட்டங்களில் ரிசாத் பதியுதீன் இல்லை

வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டங்களில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது.

சிங்கப்பூரின் உத்தி சிறிலங்காவுக்கு தேவையில்லை – மகிந்தவின் அடுத்த குத்துக்கரணம்

சிறிலங்காவைச் சிங்கப்பூர் ஆக்குவேன் என்று முன்னைய ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இப்போது சிங்கப்பூரின் முகாமைத்துவ உத்தி சிறிலங்காவுக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் மகிந்தவுக்கு சிங்களவர்கள் எதிர்ப்பு – காவல்துறை தடியடி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அரங்கிற்கு வெளியே, பிரதான வீதியில் அவருக்கு எதிராக சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போர் வெற்றிக்குப் பங்களித்த அனைவரையும் பாதுகாப்பேன் – மைத்திரி வாக்குறுதி

தாம் வெற்றி பெற்றால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் எவரையும் முன்னிறுத்த அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் தேர்தல் அறிக்கை – தமிழில் கூட இல்லை

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை கூட தமிழில் வெளியிடப்படவில்லை என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மைத்திரியுடன் நேரடி விவாதம் நடத்த மகிந்த மறுப்பு

சிறிலங்கா அதிபரை பகிரங்கமான நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்த சவாலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு ஒன்றுமில்லை

எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரையில் சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, வடக்கு, கிழக்கில் உள்ள சிறிலங்கா படையினர் மத்தியில், தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக, ஐதேக குற்றம்சாட்டியுள்ளது.

சந்திரிகாவின் காலத்தில் தான் 11,500 படையினர் கொல்லப்பட்டனர் – பௌத்த பிக்கு பதிலடி

ஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார்.