மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்த அரசில் இருந்து வெளியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்? – 48 மணிநேரத்தில் அறிவிப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த 48 மணிநேரத்தில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வரும் மார்ச் 25 இல் சமர்ப்பிக்கப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா குறித்த விசாரணைகளின் அறிக்கை வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்காவில் நாளைமறுநாள் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளைமறுநாள் ஆரம்பமாகவுள்ளது. இந்த தேர்தலில், 541,432 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வடக்கிற்கு செல்ல கட்டுப்பாடு

அதிபர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை, வடக்கிற்கு சுதந்திரமாக சென்று வருவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மைத்திரியின் தேர்தல் அறிக்கை – கூட்டமைப்பு அதிருப்தி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் மீண்டும் சீனா

சீனா தளம் அமைக்கப் போவதாக அனைத்துலக ஊடகங்களால் ஊகம் வெளியிடப்படும், அம்பாந்தோட்டையில், 16 மில்லியன் டொலர் பெறுமதியான மற்றொரு அபிவிருத்தித் திட்டத்தை சீனாவிடம் கையளித்துள்ளது சிறிலங்கா அரசாங்கம்.

சிறிலங்காவுக்கு இரு போர்க்கப்பல்களை விற்கிறது இந்தியா

சிறிலங்காவுக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளதாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளையில் ஐதேக கூட்டம் மீது ஆளும்கட்சி குண்டர்கள் தாக்குதல் – 5 பேர் காயம்.

பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளையில், இன்று மாலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐதேக நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுடன் ஐதேக இரகசிய ஆலோசனை

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுடன் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க இன்று காலை பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஒருநிறம்; தெற்கில் ஒரு நிறம் – மகிந்தவின் வண்ணஜாலம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைகளில் வடக்கு, கிழக்கில் ஒரு உத்தியையும், நாட்டின் பிறபகுதிகளில் இன்னொரு விதமான உத்தியையும் பயன்படுத்தி வருகிறார்.