மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்க ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவை இணைத்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை அமைத்து யானைச் சின்னத்தில் ஐதேக போட்டியிடவுள்ளது.

இறுதிக்கட்டத்தை எட்டியது சீன- சிறிலங்கா கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி – படங்கள்

சீன ஆயுதக் காவல் படையின் கொமாண்டோக்கள், சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் படைகளுடன் இணைந்து நடத்தி வரும் ‘பட்டுப்பாதை-2015’ கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

வேட்புமனுவில் மகிந்த கையெழுத்திட்டது எப்போது? – புதுக்குழப்பம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள போதிலும், அவர் எப்போது கையெழுத்திட்டார் என்பது தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரையா? – மறுக்கிறது சீனா

மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வகையில் சீனா பரப்புரையில் இறங்கியுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் நிராகரித்துள்ளது.

வேட்புமனு குறித்து மைத்திரி இன்னமும் முடிவெடுக்கவில்லையாம் – அமைச்சர் ராஜித புதுக்குண்டு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில், குருநாகல மாவட்டத்தில் போட்டியிட மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

வன்னியில் கைதான மருத்துவர்களுக்கு கேஎவ்சியில் விருந்து கொடுத்த இராணுவப் புலனாய்வாளர்கள்

போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களை தாம் சொல்லிக் கொடுத்தவாறு ஊடக மாநாட்டில் பதில்களைக் கூறியதற்காக, கே.எவ்.சி உணவகத்துக்கு அழைத்துச் சென்று இராணுவப் புலனாய்வாளர்கள் விருந்து கொடுத்துள்ளனர்.

சிறிலங்காவில் பொதுமக்களை காப்பாற்றத் தவறிவிட்டது ஐ.நா – மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிராக வடக்கில் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரி அரசின் முடிவினால் சீனா மகிழ்ச்சி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை விரிவாக்கும் திட்டத்துக்கு சிறிலங்காவின் துற்போதைய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து சீனா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

போட்டியிடாமல் இருப்பது நல்லது – மகிந்தவுக்கு தொலைபேசியில் கூறினார் மைத்திரி?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தொலைபேசி மூலம் தெரிவித்ததாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.