மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜப்பானியப் பிரதமருடன் ரணில் பேச்சு

ஜப்பானுக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, நேற்று ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முண்டியடிக்கும் நாடுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நேற்று வரை 38 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

போர்க்குற்ற விசாரணையை உள்ளகப் பொறிமுறையே நடத்துமாம் – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது உள்நாட்டு பொறிமுறையாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய கடைசி நேரத்தில் சமந்தா பவரின் காலைப் பிடித்தார் மங்கள?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

விசாரணை நம்பகமானதாக இருப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் முக்கியம் – சில்வியா கார்ட்ரைட்

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார் நியூசிலாந்தின் நீதிபதியான சில்வியா கார்ட்ரைட்.

மோடி – மைத்திரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோன் கெரிக்கு கடிதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் பரிந்துரைத்துள்ளபடி, போர்க்குற்றங்கள், மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு ஏற்கும் அளவுக்கு தீர்மான வரைவை பலவீனப்படுத்தும் இந்தியா? – இறுதிநேரத்தில் களமிறங்கும்

சிறிலங்கா தொடர்பாக ஜெனிவாவில் பரந்தளவிலான சம்மதத்துடன் கூடிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று நம்பகரமான புதுடெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைக்கு உதவத் தயார் – ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த சிறிலங்காவுக்கு உதவ ஜேர்மனி தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பிராங் வோல்டர் ஸ்ரெய்மேய்யர் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லையா? – ஐ.நா பேச்சாளர் பதில்

சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையா என்பது, நாம் பரிந்துரைத்துள்ள கலப்பு நீதிமன்றத்தை உள்ளடக்கிய குற்றவியல் விசாரணைகளின் பின்னரே கண்டறியப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணயகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.