மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இறுதிப்போரில் 7000 பேரே மரணம் – ஐ.நா அறிக்கை மிகைப்படுத்தியதாக கூறுகிறார் மக்ஸ்வெல் பரணகம

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, சிறிலங்காவின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்றும், 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், காணாமற்போனோர் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராயும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இருந்து கொழும்பு வந்த ‘சூடான உருளைக்கிழங்கு’ – இரகசிய நடவடிக்கை பற்றிய தகவல்கள்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, ‘சூடான உருளைக்கிழங்கு நடவடிக்கை’ (Operation Hot Potato) என்ற இரகசிய சங்கேதப் பெயரில், சிறிலங்கா அரசாங்கத்திடம், இரகசியமாக கையளிக்கப்பட்டது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணை – அமெரிக்கா வலியுறுத்துகிறது

சிறிலங்காவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு, அனைத்துலக சமூகத்தின் கணிசமான பங்களிப்புடன், உள்நாட்டு விசாரணை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது.

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் வலிமிக்கது, ஆனால் அவசியமானது – ஐ.நா சிறப்பு ஆலோசகர்கள்

மோதல் காலங்களில் எல்லா சமூகங்களுக்கும் பாரிய துன்பங்களை விளைவித்த  இருண்ட காலத்தை சிறிலங்கா கடந்து வந்திருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றவாளிகளின் பெயர்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டதா?

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையில், போர்க்குற்றவாளிகள் எவரது பெயர்களும் உள்ளக்கப்படவில்லை, இந்தநிலையில் ஏற்கனவே அதில் இடம்பெற்றிருந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆர்வம்மிக்க அமர்வாக இருக்கும் – ஐ.நா மனித உரிமை பேரவைத் தலைவர்

ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஆர்வம்மிக்கதொன்றாக அமையும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ரூக்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சம்பந்தன் அவசர கடிதம் – ஜெனிவாவில் சந்திக்கவும் திட்டம்

போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் சென்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பையும் கடுமையாக சாடும் ஐ.நா அறிக்கை – எவரையும் போர்க்குற்றவாளிகளாக பெயரிடவில்லை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், எவரது பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.