மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா இராணுவம் மீது சைபர் தாக்குதல்

சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது நத்தார் நாளன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத குழுவொன்று, சிறிலங்கா இராணுவ இணையத்தளத்துக்குள் புகுந்து, அதிலிருந்த தகவல்களைச் சி்தைக்க முயன்றது.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் பதவியைப் பிடிக்க சிறிலங்கா இராணுவத்துக்குள் பனிப்போர்

சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான, இராணுவத் தலைமை அதிகாரி பதவியைப் பிடிப்பதில், மூத்த இராணுவ அதிகாரிகளுக்குள் பனிப்போர் மூண்டுள்ளது.

அமெரிக்காவினுள் நுழைய சரத் பொன்சேகா பகீரத பிரயத்தனம் – கிறீன் கார்ட்டை புதுப்பிக்க விண்ணப்பம்

அமெரிக்கா செல்வதற்கு நுழைவிசைவு மறுக்கப்பட்ட நிலையில், வதிவிடஉரிமை (கிறீன் காட்) அட்டைக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீள விண்ணப்பித்துள்ளார்.

கொழும்பில் சம்பந்தன் – விக்னேஸ்வரன் சந்திப்பு – 3 மணிநேரம் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு

போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் கடத்தலில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வாளர்களை வெலிக்கடையில் சந்தித்தார் மகிந்த

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் விவகாரம் – சிறிலங்காவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் அழுத்தம்

சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கம் மற்றும் நம்பகமான இடைக்கால நீதிப் பொறிமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமும் வலியுறுத்தியுள்ளது.

பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் குறித்து சிறிலங்கா அரசுடன் பேசப்படவில்லையாம்

இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான இந்திய அரசாங்கத்தின் திட்டம் குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் கொழும்பு வந்த நிஷா பிஸ்வால் – அரசியல் வட்டாரங்களில் குழப்பமான தகவல்கள்

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கு நேற்று அதிகாலை திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம் தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சித் தேவைகள் குறித்து ஆராய்ந்தது சீன படை அதிகாரிகள் குழு

சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான பயிற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.