மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

3 ஆண்டுகளுக்கு முன் அவுஸ்ரேலியா சென்ற இரு தமிழ் இளைஞர்கள் டார்வின் விபத்தில் பலி

அவுஸ்ரேலியாவின் டார்வின் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இருவரும், இலங்கையில் இருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்கள் என்று அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை வான் விவகாரம் – மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் 4 மணிநேரம் விசாரணை

மீரிஹான பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் வெள்ளை வான் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தீவிர அரசியல் பரப்புரையாக மாறியுள்ள வெள்ளை வானும் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கியும்

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வானுடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி, மற்றும் அவரது மெய்க்காவலர்கள் மீரிஹானவில் பிடிபட்ட விவகாரம் சிறிலங்கா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மீரிஹானவில் சிக்கிய வெள்ளை வான் கோத்தாவின் நாடகம்? – கைதான படையினருக்குப் பிணை

மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிறிலங்காப் படையினர் மூவரும் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் கிளம்பியது வெள்ளை வான்- மூன்று சிறிலங்காப் படையினர் சிக்கினர்

சிவில் உடையில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் பயணித்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படைக்கு உரிமை உள்ளதாம்

இந்தியப் பெருங்கடலில், தனது நலன்களைப் பாதுகாக்கின்ற உரிமையை சீனக் கடற்படை கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா பரந்த மனதுடன் இடமளிக்க வேண்டும் என்றும் சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ சிந்தனையாளர் குழாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் முயற்சிகளை தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மூன்று விசுவாசிகளை தேசியப்பட்டியலில் இருந்து கடைசிநேரத்தில் நீக்கினார் மைத்திரி

மகிந்த ராஜபக்சவினால் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட மூவரின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில், நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது கொழும்பு ஆங்கில வாரஇதழ்.

ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து போரிட்ட இலங்கையர் சிரியாவில் விமானத் தாக்குதலில் பலி

ஐஎஸ்Iஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுடன் இணைந்து போரிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியர் ஒருவர் சிரியாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.