மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மைத்திரிக்கும் இந்தியா வருமாறு அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை புதுடெல்லி வருமாறு, இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மெதிரிகிரியவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே, தமக்கு மீண்டும் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதான தகவலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.

சிறிலங்கா வந்தார் சுவீடன் வெளிவிவகார அமைச்சர்- நாளை யாழ். செல்கிறார்

மூன்று நாள் பயணமாக சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோம் நேற்றுமாலை சிறிலங்கா வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றார்.

மீண்டும் கூட்டுப் பயிற்சிக்குத் தயாராகும் சிறிலங்கா- அமெரிக்க கடற்படைக் கொமாண்டோக்கள்

சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவுக்கும், அமெரிக்க கடற்படையின் சீல் படைப்பிரிவுகளுக்கும் இடையில், கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பேச்சுக்களை நடத்தவே, அமெரிக்க கடற்படையின் பசுபிக் சிறப்பு நடவடிக்கைத் தளபதி சிறிலங்கா வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிடம் இருந்து கோத்தாவைப் பாதுகாக்கும் சிறிலங்கா அரசு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு அமெரிக்காவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, சிறிலங்கா அரசாங்கம் ஆதரவளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

மணலாறு பிரதேசத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மணலாறு பிரதேசத்தில், சிங்களக் குடியேற்றங்களை சிறிலங்காவின் புதிய அரசாங்கம், தீவிரப்படுத்தியிருக்கிறது.

சிறிலங்காவில் அமெரிக்க கடற்படையின் சிறப்பு நடவடிக்கைத் தளபதி

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், சிறப்பு நடவடிக்கைக் கட்டளைப் பணியகத்தின் தளபதி, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாரிஸ் உடன்பாட்டில் சிறிலங்கா உள்ளிட்ட 175 நாடுகள் கைச்சாத்து

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில் சிறிலங்கா உள்ளிட்ட 175 நாடுகள் நேற்று கையெழுத்திட்டன. புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்துலக உடன்பாடு நேற்று நியூயோர்க்கில் கையெழுத்திடப்பட்டது.

சீனாவுடனான சிறிலங்காவின் உடன்பாட்டுக்கு எதிர்ப்பை வெளியிடவுள்ளது இந்தியா

சீனாவிடம் சிறிலங்கா பெற்றுள்ள கடன்களை, பங்கு முதலீடாக மாற்றுவது தொடர்பாக, சீனாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ள திட்டத்துக்கு இந்தியா தனது கவலையை தெரிவிக்கவுள்ளது.

ரஷ்யாவிடம் போர்க்கப்பலை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்

ரஸ்யாவிடம் இருந்து ஜிபாட் வகை போர்க்கப்பல்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுவதாக ரஸ்ய ஊடகமான ஸ்புட்னிக்  செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா மீதான கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதி தடையை நீக்குவதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்குவதற்கு, நீண்ட கலந்துரையாடல்களின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.