மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக மகிந்த நியமனம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக, கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தினேஸ் குணவர்த்தன அறிவித்துள்ளார். 

ஜூலை 17 இல் அனுராதபுரத்தில் மைத்திரிக்கு பதில் – என்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக, வரும் ஜூலை 17ஆம் நாள் அனுராதபுரவில்  பதிலளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சுதந்திரக் கட்சி தலைமையைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த – உயர்மட்டத்துடன் அவசர கூட்டம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்கி விட்டு, அதன் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த அணியை கிலிகொள்ள வைத்துள்ள மைத்திரியின் தாக்குதல் – அடுத்த கட்டம் குறித்து குழப்பம்

மகிந்த ராஜபக்சவை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை வெளியிட்ட கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பதவி விலகாமலேயே அதிகளவு மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

மாகாணசபை உறுப்பினர்களாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்து கொண்டே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், இம்முறை அதிகளவான மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவுக்கு பிரதமர் பதவியை மறுப்பது ஏன்? – மைத்திரி அளித்த விளக்கம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று தெளிவாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான காரணத்தையும் விபரித்துள்ளார்.

எட்டு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியடையும் – சுசில் போடும் கணக்கு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இலகுவாக வெற்றியைப் பெறும் என்று அதன் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இன்று மாலை சிறப்பு அறிவிப்பை வெளியிடுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சிறப்பு செய்தியாளர் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த சிறப்பு செய்தியாளர் மாநாடு நடைபெறவுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் வாரிசுக்கும் வேட்புமனு நிராகரிப்பு

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவுக்கு, எதிர்வருமு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது.

குற்றப் பின்னணியால் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் – களத்தில் இறங்கிய 3 முதலமைச்சர்கள்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் மீறி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிலருக்கு வாய்ப்பளித்துள்ளது.