மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

19ஆவது திருத்தம் நிறைவேறுமா?- இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு

சிறிலங்காவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 19ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

மைத்திரி வாக்குறுதி – உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோபித தேரர்

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளருமான கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி வண.மாதுளுவாவே சோபித தேரர், கைவிட்டுள்ளார்.

’19’ மீதான விவாதம் தொடங்கியது – அனைவரையும் ஆதரிக்க மைத்திரி கோரிக்கை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று காலை ஆரம்பமாகி சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரையாற்றியதையடுத்து, விவாதம் ஆரம்பமானது.

19வது திருத்தத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் சோபித தேரர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி வண மாதுளுவாவே சோபித தேரர், இன்று 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

சிராந்தி ராஜபக்ச, யோசித ராஜபக்ச அடுத்த சில நாட்களுக்குள் கைது?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

33 மாணவர்களுடன் நேபாளத்தில் இருந்து திரும்புகிறது சிறிலங்கா விமானப்படை விமானம்

நேபாளத்துக்கு உதவிப் பொருட்களையும், மீட்பு அணியொன்றையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானம், காத்மண்டுவில் இருந்து 33 மாணவர்களுடன் இன்று கட்டுநாயக்கவுக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இராணுவத் தளபதி நாளை சிறிலங்கா வருகிறார்

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்  நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா இராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே,  இந்திய இராணுவ தளபதி கொழும்பு வரவுள்ளார்.

சிறிலங்கா அமைதியை வெற்றி கொள்ளவில்லை – தந்தை செல்வா நினைவுப் பேருரையில் சந்திரிகா

சிறிலங்கா போரில் வெற்றி பெற்ற போதும், அமைதியை இன்னமும் வெற்றி கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

நேபாள நிலஅதிர்வில் மயிரிழையில் உயிர்தப்பிய மட்டக்களப்பு மருத்துவ மாணவி

நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த பாரிய நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டுவில் மருத்துவக் கல்வியை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்துக்கு 159 பேர் கொண்ட மீட்புக்குழுவை அதிகாலையில் அனுப்பியது சிறிலங்கா

நேற்று நிகழ்ந்த பாரிய நில நடுக்கத்தினால், 1500 பேருக்கு மேலானோர் பலியான நேபாளத்துக்கு, சிறிலங்கா இன்று அதிகாலையில் 159 பேர் கொண்ட மீட்புக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளது.