மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நேபாளம் செல்கிறது சிறிலங்கா விமானப்படை விமானம் – இலங்கையரை மீட்டு வரும்

நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டு வருவதற்காக சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்று காத்மண்டுவுக்கு செல்லவுள்ளது. நேபாளத்தில் இன்று நிகழ்ந்த மோனமான நிலநடுக்கத்தில், குறைந்தது 1130 பேர் பலியானதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

உள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிடவில்லை- சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம்

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு, நீதி அமைச்சுகள் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு

காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மன்னிப்புக் கோரியுள்ளார்.

மைத்திரியை சந்திக்க மகிந்தவுக்கு நேரமில்லையாம் – நாளைய சந்திப்பு ரத்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

சிறிலங்கா குறித்த அறிக்கையைப் பார்த்து திகைத்தாராம் ஜோன் கெரி

சிறிலங்காவில் 100 நாள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையைப் பார்த்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி திகைத்துப் போனதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளராக ராஜித சேனாரத்ன.

100 நாட்களில் சாதித்தது என்ன? – தொலைக்காட்சி உரையில் சிறிலங்கா அதிபர் விளக்கம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்றிரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது-

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் பசில் ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவை விட்டு வெளியேறினார் கோத்தா – விசாரணைக்கு 90 நாள் காலஅவகாசம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலை முன்னிலையாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.