மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கிரித்தல இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எக்னெலிகொட – விசாரணையில் உறுதி

காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கிரித்தல இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது உறுதியாகியிருப்பதாக,  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரவிராஜ், எக்னெலிகொட படுகொலைகளை மேற்கொண்டது சிறிலங்கா புலனாய்வு பிரிவே- விசாரணையில் உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலைகள், சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலிக்கு அப்பாலுள்ள கடலில் சிறிலங்கா கடற்படையிடம் சிக்கியது ஆயுதக் கப்பல்

காலிக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில், சிறிலங்கா கொடியுடன் ஆயுதக் கப்பல் ஒன்று சிறிலங்கா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடங்கி விட்டோம் – ஜப்பானில் ரணில்

அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே  பேச்சுகளை ஆரம்பித்து விட்டதாக நேற்று ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய  சிறப்புரையில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐ.நா- சிறிலங்கா இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாம் – மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்

ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் படுகொலை பிரதான சந்தேகநபர் சுவிசில் – சிறிலங்காவுக்கு கொண்டு வர நடவடிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய, முக்கிய சந்தேகநபரை சுவிற்சர்லாந்தில் இருந்து விசாரணைக்காக சிறிலங்காவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டு செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவு

போருடன் தொடர்புடைய விவகாரங்களுக்கு, உள்நாட்டு செயல்முறைகளின் மூலம் தீர்வு காண்பதற்கு, சிறிலங்காவுக்கு ஜப்பான் ஆதரவளிப்பதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

மகிந்தவைக் கண்டு ஊடகங்கள் இன்னமும் அஞ்சுகின்றன – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மீது ஊடகங்கள் இன்னமும் அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல.

கடாபியின் தோளில் நான் கைபோடவில்லை – மறுக்கிறார் மகிந்த

தாம் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபியின் தோளில் கைபோடவில்லை என்றும், அவர் தனது தோளில் கைபோட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார் சி்றிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கிரித்தல இராணுவ புலனாய்வு முகாமுக்குள் தேடுதல் நடத்த நீதிமன்றம் அனுமதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிரித்தல இராணுவப் புலனாய்வு முகாமில் ஆய்வுகளை மேற்கொண்டு ஒளிப்படம் எடுக்கவும், அங்குள்ள இராணுவ ஆவணங்களைப் பரிசீலிக்கவும், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.