மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சீனாவுடனான நெருங்கிய மத உறவுகளை வெளிப்படுத்த சிறிலங்காவில் புதிய பௌத்த தொலைக்காட்சி

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான மத உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், புதிய பௌத்த தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவைகள் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்து நாடு திரும்புகிறார் மன்னார் ஆயர்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் காடுகள் அழிப்பை ஆராய அதிகாரிகள் குழு – சிறிலங்கா அதிபர் அனுப்புகிறார்

வடக்கில் நடந்து வரும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு மற்றும், மீள்குடியேற்றம் தொடர்பாக நேரடியாகஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

திருகோணமலைக் கடலில் கடற்படை, விமானப்படை தொடர்ந்து தேடுதல்

திருகோணமலைக் கடலில் மோசமான காலநிலைக்கும் மத்தியில் சிறிலங்கா கடற்படையும், விமானப்படையும் சடலங்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சென்னைக்கான விமான சேவையை இன்று மீண்டும் ஆரம்பிக்கிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்

சென்னைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பல்கலைக்கழக, உயர்வகுப்பு மாணவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை

பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு எச்.ஐ.வி உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு 102 இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்குவதாக கூறுகிறார் அவரது பேச்சாளர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதான செய்திகளில் உண்மையில்லை என்று மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

மகிந்த – ரணில் இரகசியமாகச் சந்திக்கவில்லையாம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான தகவல்களை சிறிலங்கா பிரதமர் செயலகம் மறுத்துள்ளது.

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் – ரெலோ அறிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அறிவித்துள்ளது.