மேலும்

மாணவர்கள் கொலை – விசாரணை பற்றிய தகவல்களை வெளியிடத் தடை

ajith-rohanaயாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று, சிறிலங்கா காவல்துறை கண்டிப்பான உத்தரவை அதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளது.

கொக்குவிலில் கடந்த வியாழக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனையடுத்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பல குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த விசாரணைகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களுக்குப் பகிர வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை திணைக்களம், காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *