வெளிநாடுகளிடமுள்ள பொருளாதார கேந்திரங்களை மீட்போம் – கோத்தா
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சிறிலங்காவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஒருபோதும் வெளிநாடுகளுக்கு வழங்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் நேற்று நடந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய இடங்கள் இப்போது வெளிநாடுகளின் கைகளில் உள்ளன.
சிறிலங்கா தற்போது, பல்வேறு சக்திகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இந்த சக்திகளின் தலையீடுகளில் இருந்து சிறிலங்காவினால் விலகிக் கொள்ள முடியாது.
எதிர்காலத்தில் நிறுவப்படும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்கள் மீட்டெடுக்கப்படும்.
தேசிய பாதுகாப்பை மீட்டெடுப்பதுடன், எதிர்காலத்தில் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.