மேலும்

சிறிலங்காவுக்கான தூதுவராக முக்கிய இராஜதந்திரியை நியமிக்கிறது அமெரிக்கா

Atul Keshapசிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் கடந்த ஆண்டு இறுதியில் ஐ.நாவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்காவுக்கான தூதுவர் பதவி இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது.

சிறிலங்காவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவுள்ள நிலையில், முக்கியமான ஒரு இராஜதந்திரியை இந்தப் பதவிக்கு நியமிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கமையவே, நிஷா பிஸ்வாலுக்கு அடுத்த நிலையில், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும், அதுல் கெசாப் கொழும்புக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான, இவர், அண்மையில், நிஷா பிஸ்வாலுடன் கொழும்பு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *