மேலும்

கம்போடியா பயணத்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு,, இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 26ஆம் நாள் தொடக்கம், கம்போடியாவுக்கும் லோவோசுக்கும் பயணம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.

எனினும், அவரது இந்தப் பயணத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதமே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *