ஜிகாதி தீவிரவாதம் பொது அச்சுறுத்தலாக உள்ளது – இந்திய தூதுவர்
ஜிகாதி தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர், தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று அனைத்துலக யோகா நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
“யோகா ஒன்றை எமக்குக் கூறினால், ஜிகாதி தீவிரவாதம் அதற்கு எதிர்மாறானதாக கூறுகிறது. இந்த ஜிகாதி கொள்கை, அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த பிரிவினைவாத கருத்தியல்களைக் கொண்ட மக்களின் மனங்களை நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.
நம்மை ஒன்றிணைக்கும் சக்திகளை நாம் பலப்படுத்தும் நேரம் இது. நாங்கள் ஒன்றுபட்டால், எழுந்து நிற்க முடியும், பிளவுபட்டால், வீழ்ச்சிகாண நேரிடும்.” என்றும் அவர் தெரிவித்தார்.