காலதாமதம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான காலஅவகாசமாக அமையக் கூடாது – அனைத்துலக மன்னிப்புச் சபை
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்த அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போட ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவு, அத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு அனுமதிப்பதாக அமையக் கூடாது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ரிச்சர்ட் பெனெட் இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில்,
‘சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை மற்றும் நீதிக்காக காத்திருக்கின்றனர்.
பாலியல் வதைகள் உள்ளிட்ட சித்திரவதைகளில் இருந்து தப்பியோர், கொல்லப்பட்ட, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்ப்பட்டவர்களின் குடும்பத்தினர், இந்த அறிக்கைக்காக நீண்டகாலமாக காத்திருக்கின்றனர்.
மேலதிக காலஅவகாசம் வலுவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்க உதவும் என்பது மற்றும் பொறுப்புக்கூறலை சிறிலங்கா அதிகாரிகள் உறுதியான கடப்பாட்டுடனும் இருந்தால் மட்டுமே, அறிக்கையைத் தாமதிப்பதை நியாயப்படுத்தும் ஒரே காரணமாக இருக்க முடியும்.
இது போர்க்கால மீறல்கள், குறித்த ஐ.நா விசாரணைகளுடன் ஒத்துழைப்பது மற்றும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது ஆகியவற்றையும் உள்ளடக்கியது.’ என்று தெரிவித்துள்ளார்.