வடக்கு மாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு
போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து ஐ.நாவின் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,
இனப்படுகொலைத் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கிறது.
போர்க்குற்றங்கள் முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்றிருந்தன. எனவே, போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் குறித்து ஐ.நா விசாரணை நடத்தக் கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
வடக்கு மாகாணசபையின் தீர்மானம் முன்னைய அரசாங்கத்துக்கு எதிரானதே என்றும், இதனால், புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.