மேலும்

வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் மைத்திரி – பீரிஸ் குற்றச்சாட்டு

gl-peirisசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

”சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். இததன் மூலம் அவர் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும கூட, சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதமரின் ஊடாக நிதி ஒதுக்கப்படாது என்று கூறியிருக்கிறார்.

இது சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வாக்காளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அந்த வாக்குகளை ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பெற முனைகின்றன.

உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்குச் சொந்தமானது.  ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் எதுவானாலும், உள்ளூராட்சி சபைகளுக்கு அவற்றை பங்கிட வேண்டும். அந்த நிதி ஒன்றும் சிறிலங்கா அதிபரினதோ, பிரதமரினதோ தனிப்பட்ட சொத்து அல்ல.

நிதி ஒதுக்கீட்டை வெட்டுவோம் என்று எச்சரிப்பது, தேர்தல் சட்ட மீறல். அத்துடன் மக்களின் அடிப்படை உரிமையையும் மீறும் செயல்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *