எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
காலி மாவட்டத்தில் உள்ள, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்த முறைப்பாடு மீதான தீர்ப்பு வழங்கப்படும் வரையில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்திருந்த வேட்பு மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து, எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள், 340 உள்ளூராட்சி சபைகளுக்கே தேர்தல் நடத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.