20 ஆவது திருத்தச்சட்ட வரைவில் திருத்தம் செய்யப்படும் – சட்டமா அதிபர்
சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில், திருத்தங்கள் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 மனுக்களின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் முன்பாக நடைபெற்றது.
இதன் போது, சட்ட மா அதிபர் முன்னிலையாகி, விளக்கமளித்தார்.
இதன் போது அவர், மாகாணசபைகளின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படாது. நிர்வாக அதிகாரம் ஆளுனரிடமே இருக்கும். இந்த சட்டவரைவு மீதான குழுநிலை விவாதத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.