ஜெனிவா தீர்மான விடயத்தில் சிறிலங்கா, அமெரிக்காவுடன் இணக்கப்பாடு இல்லை என்கிறது கூட்டமைப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கம், அமெரிக்கா இடையே உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
‘ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றே எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
எதிர்காலத்தில் இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.’ என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.