தற்கொலைத் தாக்குதல் அங்கி 5 ஆண்டுகளுக்கு முந்தியது- விசாரணையில் கண்டுபிடிப்பு
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி, சுமார் ஐந்து ஆண்டுகள் பழைமையானது என்று, தீவிரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக, பதில் காவல்துறை மா அதிபர் எஸ்எம்.விக்கிரமசிங்கவை மேற்கோள்காட்டி, மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது.