மேலும்

பசில் ராஜபக்சவினால் பிளவுபடும் நிலையில் கூட்டு எதிரணி

basilமகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில், பசில் ராஜபக்சவினால் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்ச தொடர்பாக, கூட்டு எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மகிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகப்பெரும, ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளனர்.

கூட்டு எதிரணியால் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள அரசியல் கட்சியில் பசில் ராஜபக்சவை உள்ளீர்க்கும் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய அரசியல் கட்சியில் பசில் ராஜபக்சவுக்கு முன்னணி இடம் அளிக்கப்பட்டால், கூட்டு எதிரணியில் உள்ள உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் அல்லது தொடர்ந்தும் சுதந்திரமான இயங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கூட்டு எதிரணியில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை, பிரசன்ன ரணதுங்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், அந்த கருத்து வேறுபாடு என்பது எவரும் பிரிந்து போவதாக அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *