மேலும்

மாதம்: December 2025

உயர்மட்டத் தலைவரை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது சீனா

பேரிடரால்  பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு சீனா உயர்மட்ட தலைவர் ஒருவரை அனுப்பி வைக்கவுள்ளது.

சிறிலங்காவின் விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவ கனடா உறுதி

பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின்   விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் கனடா உறுதியளித்துள்ளது.

சிறிலங்காவுடன் வரிகள் குறித்து மீண்டும் பேச்சு – அமெரிக்கா பச்சைக்கொடி

சிறிலங்காவுடன் மீண்டும் வரிவிதிப்பு  தொடர்பான பேச்சுக்களை தொடங்குவதில் அமெரிக்கா கவனம் செலுத்தவுள்ளதாக  அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், தெரிவித்துள்ளார்.

சந்திரிகா அரசின் பேச்சுக்குழுவில் இருந்த ராஜன் ஆசீர்வாதம் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில், அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த ராஜன் ஆசீர்வாதம் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புகளை மீளமைக்க சீனாவிடம் உதவி கோரும் சிறிலங்கா

அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து  உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

சாரா ஜஸ்மின் மரணத்தை உறுதிப்படுத்த மீண்டும் மரபணுச் சோதனை?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களில் ஒருவரான சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி ராஜேந்திரன் உயிரிழந்து விட்டாரா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு மரபணுப் பரிசோதனை நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல  சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அலிசன் ஹூக்கர்

சிறிலங்கா வந்துள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர்  கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

முள்ளிக்குளத்தில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அனுமதி

மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பலாலிக்கு இன்று மீண்டும் பறந்தது அமெரிக்க விமானப்படை விமானம்

சிறிலங்காவின் வட பகுதியில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு முக்கியமான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக, அமெரிக்க விமானப்படையின் C-130J  விமானம் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டது.