மேலும்

செம்மணிப் புதைகுழியில் 101 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து  அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 20ஆவது நாளாக நீடித்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, 11 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்தே இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே இனங்காணப்பட்ட 9 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் நேற்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை சேகரிக்கப்பட்ட 46 சாட்சியப் பொருட்களும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *