செம்மணிப் புதைகுழியில் இதுவரை 45 எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் -செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வின் போது, 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார்.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின், இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாள் அகழ்வு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இதுவரை மொத்தமாக 45 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை புதிதாக மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன.
செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான புதிய பகுதியில் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.