பிணையில் விடுதலையானார் சம்பிக்க ரணவக்க
ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பாக, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினால் கடந்த புதன்கிழமை, முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சம்பிக்க ரணவக்க இன்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது அவரது சார்பில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு பிரதம நீதிவான், அவரை 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், ஐந்து பேரின் தலா 5இலட்ச ரூபா பிணையிலும், செல்ல அனுமதித்தார்.
இதையடுத்து, உடனடியாகவே சம்பிக்க ரணவக்க விடுதலை செய்யப்பட்டார்.
அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கு வந்திருந்தனர்.