மேலும்

கட்சி எந்த முடிவை எடுத்தாலும் கோத்தாவையே ஆதரிப்பேன் – நிமல் சிறிபால

தமது கட்சி எந்த முடிவை எடுத்தாலும், தாம், பொதுஜன  பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கே ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உபதலைவர்  நிமல் சிறிபால டி சில்வா.

பதுளை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில்  உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடுக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களே தடையாக இருக்கின்றனர்.

சுதந்திரக் கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் தயாராக உள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *