‘வேட்பாளர் நானே எனக் கூறவில்லை’ – ரணில் மறுப்பு
அதிபர் தேர்தலில் தானே போட்டியிடப் போவதாக நேற்றைய கூட்டத்தில் தாம் கூறியதாக வெளியாகியுள்ள செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்தைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர், கருத்து வெளியிடுகையில், “நேற்று நடந்த கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் குறித்த தனது நிலைப்பாட்டை செயற்குழுவுக்கு தெரியப்படுத்துவேன் என்றும், செயற்குழுவே முடிவெடுக்கும் என்றே பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.