மேலும்

அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை – முஸ்லிம் காங்கிரஸ் முடிவு

சிறிலங்கா அரசாங்கத்தில் மீண்டும் அமைச்சர் பதவிகளை இப்போது பொறுப்பேற்றுக் கொள்வதில்லை என, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என நேற்று நடந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

றிசாத் பதியுதீனை பதவி விலக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து. அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர்.

எனினும், பின்னர் ஐதேகவைச் சேர்ந்த கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர், மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *