அவசரகாலச்சட்டம் மீண்டும் நீடிப்பு
அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் தேவாலயங்கள், விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவில் ஏப்ரல் 22ஆம் நாள் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், மே 22ஆம் நாள் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டது. மீண்டும் மூன்றாவது தடவையாக ஜூன் 22ஆம் நாள் அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவசரகாலச்சட்டம் ஒரு மாதத்துக்கு மாத்திரமே செல்லுபடியாகும்.
அவசரகாலச்சட்ட அறிவிப்பு அல்லது அதனை நீடிக்கும் அறிவிப்புகளுக்கு, 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.