மேலும்

தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்

இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் மூன்று நாள்கள் பயணமாக நேற்று சிங்கப்பூருக்குச் சென்றுள்ள நிலையில் சிறிலங்கா அதிபரும் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19 ஆவது கூட்டத்தில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாளை பிஸ்கெக் நகரில் ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சிறிலங்கா உறுப்பு நாடாக இல்லாத போதும், கலந்துரையாடல் பங்காளர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *