சிறிலங்கா விமானப்படைக்கு புதிய போர் விமானங்கள் – ரணில் வாக்குறுதி
சிறிலங்கா விமானப்படைக்கு புதிதாக போர் விமானங்களையும் பயிற்சி விமானங்களையும் பெற்றுத் தருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
விமானப்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நேற்றுக் காலை அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதன்போதே, சிறிலங்கா விமானப்படைக்குத் தேவையான போர் விமானங்களையும் பயிற்சி விமானங்களையும் பெற்றுத் தர தயாராக இருப்பதாக, ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படைக்கு அரசாங்கம் உலங்குவானூர்திகளையும் கொள்வனவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா பிரதமரின் பாதுகாப்பு இணைப்பாளர் மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியவும் கலந்து கொண்டார்.