மேலும்

மகிந்தவைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று முன்னர் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அதிபர் செயலகத்தில் நடந்த இருதரப்பு பேச்சுக்களை அடுத்து, இந்தியத் தூதுவரின் இல்லமான இந்தியா ஹவுசுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சில சந்திப்புகள் நடத்தி வருகிறார்.

முதலாவதாக, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்

இதன் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரந்துபட்ட இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் விரிவான சந்திப்பு இடம்பெற்றது. தீவிரவாத முறியடிப்பு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியில், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில்,  நெருக்கமான பிணைப்பு இருக்க வேண்டிய தேவை குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்” என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் மகிந்த ராஜபக்சவுடன், பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ், தினேஸ் குணவர்த்தன, நாமல் ராஜபக்ச ஆகியோரும், இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *