முள்ளிவாய்க்கால் பேரூழியின் பத்தாண்டுகள்
சிங்களப் பேரினவாத அரசுடன், உலகம் முழுதும் இணைந்து நடத்திய, முள்ளிவாய்க்கால் பேரூழியில், உயிரையும், உடலையும், இனத்தின் விடுதலைக்காகக் கொடுத்து, மண்ணில் விதையான அனைவரையும் இந்நாளில் நினைவில் கொள்வோம்.
சிங்களப் பேரினவாத அரசுடன், உலகம் முழுதும் இணைந்து நடத்திய, முள்ளிவாய்க்கால் பேரூழியில், உயிரையும், உடலையும், இனத்தின் விடுதலைக்காகக் கொடுத்து, மண்ணில் விதையான அனைவரையும் இந்நாளில் நினைவில் கொள்வோம்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அகமட் முவாத்தின் மனைவி, முதலாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள்கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட மூன்று சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்கொலைக் குண்டுதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கொள்வனவு செய்து, அதன் ஆசனத்தை மாற்றியமைத்துக் கொடுத்தவர் என்ற சந்தேகத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் நேற்றுமுன்தினம் மாலை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பீஜிங்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி காலஅவகாசம் கோரியுள்ளது.