மேலும்

தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ள சிறிலங்கா

எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐந்து அமெரிக்கர்களும் உயிரிழந்த – ஈஸ்டர் நாளன்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா கண்டிப்பதாகவும்,  தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா வலுவான ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் இந்தச் சந்திப்பின் போது,  கூறினார்.

குண்டுவெடிப்புகளை அடுத்து, அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் சிறிலங்கா விரும்புவதாக தெரிவித்தார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *