மேலும்

சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக பூஜித ஜயசுந்தர அடிப்படை உரிமை வழக்கு

தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்பும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன் சிறிலங்கா அதிபரினால் பதில் காவல்துறை மா அதிபராக, சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், அவர் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இது தொடர்பான அடிப்படை உரிமை மனுவை பூஜித ஜயசுந்தர நேற்று உச்சநீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையிலேயே பூஜித ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

அதேவேளை, இதே குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய  முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, சிறிலங்கா அதிபரின் அறிவுறுத்தலை அடுத்து, பதவி விலகியிருந்தார். அவரும் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *