மேலும்

சம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா மைத்திரி?

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை.

அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு, கடந்த 5ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த நியமனத்துக்கு, சிறிலங்கா அதிபரின் அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நியமனம் தொடர்பான பரிந்துரையைச் செய்வதற்காக, அரசியலமைப்பு சபை இந்த மாத இறுதியில் கூடவுள்ளது.

இந்தநிலையில், இரா.சம்பந்தனின் நியமனத்துக்கான அங்கீகாரம் சிறிலங்கா அதிபரால் இன்னமும் வழங்கப்படாமல் இருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே, அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *