மேலும்

கொழும்புக்கு புறப்படத் தயார் நிலையில் அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல்

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட, ஷேர்மன் என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் விரைவில் சிறிலங்கா கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்தக் கப்பலை சிறிலங்காவுக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.

கப்பலின் மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, கப்பலை இயக்குவதற்கான பயிற்சிகளும் சிறிலங்கா கடற்படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிறிலங்கா நோக்கி இந்தப் போர்க்கப்பல் விரைவில் புறப்படவுள்ளது.

சிறிலங்கா கடற்பரப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்கா வழங்கியுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கடந்தவாரம் சென்று பார்வையிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *