அவுஸ்ரேலியா – சிறிலங்கா இணைந்து இடர்முகாமைத்துவ கூட்டு பயிற்சி
அவுஸ்ரேலிய – சிறிலங்கா படைகள் இணைந்து நான்கு நாள் மனிதாபிமான உதவி மற்றும் இடர் காப்பு தொடர்பான கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
கொழும்பு வந்துள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் போர்க்கப்பல்களுடன் இணைந்து சிறிலங்கா படையினர் இந்தப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது இடர் முகாமைத்துவ நிபுணர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த இடர்முகாமைத்துவ பயிற்சிகளில் சிறிலங்கா அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.